For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து திமுக எம்எல்ஏக்கள் கு.க.செல்வம், ரங்கநாதன் அட்டகாசம்

சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கையில் அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்ககு சட்டசபை சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியது.

DMK MLA KK.Selvam was sat in the Speakers Chair in the assembly

இதற்கு சபாநாயகர் மறுக்கவே ஆத்திரமடைந்த திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை பிடித்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் இருக்கையிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து புரசைவாக்கம் திமுக எம்எல்ஏவான ரங்கநாதனும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். மேலும் சபாநாயகரை போலவே அவர் கையசைத்து கிண்டல் செய்தார்.

English summary
DMK MLAs involved in a uproar in assembly. DMK MLA KK.Selvam was sat in the Speakers Chair in the assemmbly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X