Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளும் கட்சி எம்எல்ஏ ஆவேசமாக சிறைபிடித்த மக்கள்.. ஆம்பூரே அரண்டு போச்சு.. நடுரோட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ளது பாப்பனப்பல்லி ஊராட்சி.. இங்கு ஆறு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த மக்கள் இன்று பொங்கி எழுந்தனர்.

DMK MLA was captured by the general public near Ambur in Tirupattur district

பாப்பனபல்லி ஊராட்சி அலுவலகம் எதிரே 200க்கும் மேற்பட்ட மக்கள், உமராபாத்-வாணியம்பாடி சாலைக்கு வந்தனர். அங்கு அரசு பஸ்ஸை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஊர் மக்கள் சிலர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். ஊராட்சி தலைவர் பூபதி மற்றும் துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோரை அலுவலகத்திலேயே வைத்து பூட்டினர். சாலை மறியல் செய்த மக்களை சமாதானப்படுத்த திமுகவைச் சேர்ந்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் சென்றார்..

DMK MLA was captured by the general public near Ambur in Tirupattur district

ஆளும் கட்சி எம்எல்ஏ வில்வநாதனை சிறைபிடித்த மக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ இன்றே நிரந்தர தீர்வை உருவாக்கிவிட முடியாது என்றும் விரைவில் சரி செய்துவிடலாம் என்றும், தண்ணீர் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும் என்றும் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது ஒருவர், இன்றே ஸ்டெப் எடுக்க முடியாது என்பதை ஏற்கிறோம்.ஆனால் ஊராட்சியில் நான்கு வருடமாக என்ன செய்தார்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பியபடி இருந்தார்.

இது தொடர்பாக பாப்பனப்பல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பி எங்கள் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டார். ஆனாலும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

இதனிடையே போலீசாரும், அதிகாரிகளும் சென்று சீரான குடிநீர் விநியோகத்திற்கு உறுதி அளித்த பிறகே மறியலை மக்கள் கைவிட்டனர். ஊராட்சி அலுவலகத்தில் பூட்டப்பட்ட தலைவர், துணை தலைவர் ஆகியஇருவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த மறியல் காரணமாக வாணியம்பாடி உமராபாத் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+