கருணாநிதி தலைமையில் ஜூன் 15-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 15-ந் தேதி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வரும் 16-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின்போது விவாதங்களில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் எப்படி செயலாற்ற வேண்டும்? என்பது தொடர்பாக அறிவுறுத்துவதற்காக வரும் 15-ந் தேதி தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சட்டசபை தி.மு.க, கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி தலைமையில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications