Breaking News: தாமிர உருக்கு ஆலை தமிழகத்துக்கு வேண்டாம் என சட்டம் இயற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சென்னை: தமிழகத்தில் தாமிர உருக்கு ஆலை வேண்டாம் என சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டசபையில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை குறித்த விவாதத்தில் ஸ்டாலின் இதனை வலியுறுத்தினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை செலுத்திய ரூ100 கோடி அபராத தொகை எங்கே எனவும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு ரூ1 கோடி நிவாரணம் தர வலியுறுத்தினார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றம் சொல்லி இரண்டு மாநிலத்திற்கும் ஒற்றுமை வராது - கமல்ஹாசன்
காலா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்
விஸ்வரூபம் போல காலாவும் தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிபெறும் - கமல்ஹாசன்
எஸ்வி சேகர் இதுவரை கைது செய்யப்படாதது தவறுதான் - கமல்ஹாசன்
தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
நடிகர் கமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: பாலகிருஷ்ணன்
காவிரி பிரச்னை மீண்டும் தவறான பாதைக்குப் போவது சரியல்ல: முத்தரசன்
காவிரி விஷயத்தில் கமல் பச்சை துரோகம் செய்துவிட்டார்: மணியரசன்
தமிழக விவசாயிகளை அழிக்கவே கமல் கர்நாடக முதல்வரை சந்தித்துள்ளார் : பி.ஆர் பாண்டியன்
இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என கமல் வேண்டுகோள்
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காண கமல் வலியுறுத்தல்
கர்நாடகா விவசாயிகளைப் போல தமிழக விவசாயிகளும் முக்கியம்- குமாரசாமி
சினிமா விவகாரம் குறித்து குமாரசாமியுடன் பேசவில்லை
பொதுமக்கள் தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம் - அருணா ஜெகதீசன்
பொதுமக்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் நடந்ததை கூற வேண்டும்
கைவசம் வீடியோக்கள் இருந்தால் எடிட் செய்யாமல் ஒரு வாரத்திற்குள் அளிக்கலாம்
ஜூன் 22ம் தேதிக்குள் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
தூத்துக்குடியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் - அருணா ஜெகதீசன்












Click it and Unblock the Notifications