காவிரி.. கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் பிரணாப்பிடம் நேரில் வலியுறுத்தல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் இன்று மாலை கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குடியரசுத் தலைவரை டெல்லியில் இன்று மாலை சந்தித்தனர்.

அப்போது குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பால் காவிரி டெல்டா பகுதிக்கு இடைக்கால நிவாரணமாக காவிரி நீர் திறக்கக் கோரி வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி ,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications