மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
மாணவர் முத்துக்கிருஷ்ணன்ன மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சென்னை: மாணவர் முத்துக்கிருஷ்ணன்ன மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மாணவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் தனது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேதபரிசோதனையில் அவர் மரணம் தற்கொலை என உறுதியானது.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து தமிழக சட்டசபையில் திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். தலைநகரான டெல்லியிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.