நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? அன்புமணிக்கு தாமரைச்செல்வன் பதில் சவால்
சென்னை: திமுக மற்றும் பாமக அன்புமணி ஆகியோர் இடையேயான அறிக்கை யுத்தம் இன்னும் நின்றபாடில்லை.
தமிழக அரசை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதியில்லை என்று ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, தருமபுரி முன்னாள் எம்.பி தாமரைச் செல்வன் மூலம் திமுக அன்புமணி ராமதாசுக்கு பதில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், தாமரைச் செல்வனை வைத்து ஸ்டாலின் போக்குகாட்டுவதாக கூறி அன்புமணி ராமதாஸ் நேற்று ஒரு காட்டமான கடிதத்தை ஸ்டாலினுக்கு எழுதியிருந்தார்.

இந்த அக்கப்போர் இத்தோடு முடியும் என்று பார்த்தால், இன்று, தாமரைச் செல்வன் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் "தாங்கள் அன்பானவர் மட்டுமல்ல, அழகானவரும் என்று நினைத்த அப்பாவி வன்னியர்களில் நானும் ஒருவன். ஆனால், அழகு இருக்கும் இடத்தில் 'அது' இருக்காது என்பதை தாங்கள் நேற்று விட்ட பிதற்றல் மூலம் எங்களுக்கு மீண்டும் புரிய வைத்துள்ளீர்கள்.
தங்களைப் பற்றி அரிக்கை விடுத்த வவழக்கின் வாதியாகிய என்னை வாதத்துக்கு அழைக்காமல், வழக்கிற்கே சம்மந்தமில்லாதவருக்கு சம்மன் அனுப்பும் அதி புத்திசாலி நீங்கள்.

வழக்கில் சம்மந்தமில்லாமல் ஆஜராவதுதானே தங்களின் வாடிக்கை. வழக்கு தொடுத்தது நான், வாதத்திற்கு வாய்ப்பை முதலில் எனக்கு தாருங்கள். முதலில் என் வாதத்துக்கு பதில் கூறுங்கள். கீழ் கோர்ட்டைத் தாண்டிதானே மேல் கோர்ட்டிற்கு போக முடியும்? வாதத்தை எங்கு வைப்போம்? தருமபுரியிலா? சென்னையிலா? தங்களின் தைலாபுரம் தோட்டத்திலா? நான் ரெடி.. நீங்க ரெடியா?.." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications