அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினர் சாலைமறியல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாக்குகளை சேகரித்து வருகின்ற நிலையில் திமுக தொண்டர்கள் இன்று காலை தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் கட்சி கொடிகளை தேர்தல் அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகோபுரம் அருகே திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக முறையாக அனுமதி பெற்ற பிறகு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications