கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை... எந்த கட்சிக்கும் ஆட்சியில் பங்கு இல்லை... மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; எந்த கட்சிக்கும் ஆட்சியில் பங்கும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் கூட்டணி என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

DMK rules out going in for coalition govt

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தே.மு.தி.க. மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையை மக்கள் ஏற்கவே மாட்டார்கள். 1980ஆம் ஆண்டு இதேபோல் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தன.

ஆனால் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை அப்படியே இருக்காது.. கட்சிகள் திசைமாறத்தான் செய்யும். தற்போதைய கூட்டணி நிலைமை என்பது அடியோடு மாறவே செய்யும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+