திமுகவில் மேலும் 2 சஸ்பென்ட் பட்டியல் ரெடி.. எப்போது வெளியாகும்?
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகளை சஸ்பென்ட் செய்வதற்கான மேலும் 2 பட்டியல்களை திமுக தலைமை தயாரித்துள்ளது. அந்தப் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்பட இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 2 குற்றச்சாட்டுகளின் கீழ் சஸ்பென்ட் பட்டியல்களை திமுக தலைமை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் நிதியை முறைகேடாக செலவு செய்தவர்கள்; தேர்தலில் வேலையே பார்க்காமல் ஒதுங்கி இருந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
தனித்தனியாக தயாரிக்கப்பட்ட இப்பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்ப இருக்கிறதாம். இப் பட்டியல்களை எப்போது வெளியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆலோசித்து முடிவெடுக்க இருக்கிறாராம். இதனால் திமுக பிரமுகர்கள் பலரும் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.