கட்ஜுவுக்கு இந்த ஸ்டண்ட் தேவையா?... திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தாக்கு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சொத்துக் கணக்கை கேட்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு யார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு எதற்கு இவருக்கு இந்த அனாவசிய ஸ்டண்ட் என்று கேட்டுள்ளார் எம்.எல்.ஏவும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளருமான ஜெ. அன்பழகன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியலுக்கு வருவதற்கு முன் கருணாநிதி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு என்ன? இப்போது என்ன?" என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதையெல்லாம் கேட்க நீங்கள் யார்? வருமானவரித்துறை அது குறித்து பார்த்துக் கொள்ளும்.
வேண்டுமானால் ஆர்டிஐ - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் தெரிந்து கொள்ளவும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு அனாவசியமான ஸ்டண்ட் தேவையா?
முதலில் உங்கள் சொத்து மதிப்பை பகிரங்கமாக அறிவிக்கவும். ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே எப்போதும் கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள். அப்படி தான் எங்கள் தலைவரும் கடுமையாக உழைத்து முன்னேறி இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்று அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications