For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தலில் காங். ஆதரவா? கருணாநிதி முடிவு செய்வார்- திருச்சி சிவா

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் ஆதரவை கோருவது பற்றி கட்சித் தலைவர் கருணாநிதி முடிவு செய்வார் என்று தி.மு.க வேட்பாளர் திருச்சி சிவா தெரிவித்தார்.

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அக்கட்சிக்கு 26 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trichy siva

இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் திருச்சி சிவா இன்று சந்தித்து பேசினார். அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, கருணாநிதியிடம் வாழ்த்து பெற சந்தித்தேன். வரும் 21ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன் என்றார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோருவது பற்றி திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருப்பதால் போட்டியிடுகிறேன் என்றார்.

English summary
DMK RS Candidate Trichy Siva told, his party leader Karunanidhi will decide on seeking support from congress for election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X