தலைமை செயலர் ஒப்புதலுடன் ஆய்வு-ஆளுநர் அறிக்கைக்கு விளக்கம் கேட்ட திமுக-பதில் தராததால் வெளிநடப்பு
ஆளுநர் விவகாரத்தில் திமுக இன்று வெளிநடப்பு செய்தது.
சென்னை: தலைமை செயலர் ஒப்புதலுடன் தாம் ஆய்வு நடத்துவதாக ஆளுநர் வெளியிட்ட அறிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் தர வேண்டும் என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அரசு தரப்பில் பதில் அளிக்காத காரணத்தால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று (27-06-2018) தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் நேற்றைய தினம் ராஜ் பவனில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பை பற்றி கேள்வியெழுப்பினேன். "Raj Bhavan comes out with a legal opinion on powers" என்கிற தலைப்பிலே இன்றைக்கு "தி இந்து" பத்திரிகையிலே கூட தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதிலே, குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி, Pointing out that there was no illegality in "mere meeting with [the] district officers," which took place after the Governor had requested Chief Secretary Girija Vaidyanathan and Commissioner of Revenue Administration K. Satyagopal to arrange such a meeting என்று மிகத்தெளிவாக அறிக்கை வந்திருக்கிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் நேரடியாக கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு அந்த அடிப்படையில் தான் நான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன் என்ற செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தி அரசுக்கு தெரியுமா? முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? அப்படி இருந்தால் ஏற்கனவே முதலமைச்சர் அரசின் சார்பில் இதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையிலிருந்து "ஆய்வு நடத்துவதற்காக நான் செல்லவில்லை" என்று ஒரு அறிக்கை வந்தது. ஆனால், இன்றைக்கு தலைமைச் செயலாளரின் ஒப்புதலோடு அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் ஆய்வு நடத்துகிறோம் என்ற செய்தி வந்திருக்கிறது.
இதைப்பற்றி, அவையில் பேசிட வேண்டுமெனவும் முதலமைச்சர் இதற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டுமென கேட்ட நேரத்தில், அதற்கு எதுவும் பேசாமல் வாய்மூடி அமைதியாக இருந்தார். எனவே, எந்த பதிலும் அளிக்காமல் அவர் அமைதியாக இருந்த காரணத்தால் அதனைக் கண்டித்து நாங்கள் தற்காலிகமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications