தூத்துக்குடி கலவரத்திற்கு திமுக தான் காரணம்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு
தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. காலையில் சட்டசபை தொடங்கியதில் இருந்து ஸ்டெர்லைட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து பேசிய முதல்வர் பழனிச்சாமி திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தார்.

தூத்துக்குடியில் அமைதியான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு திமுக தான் காரணம். திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் நடத்திய போராட்டத்தில்தான் கலவரம் நடந்தது. கீதா ஜீவன் தலைமையில் பேரணி சென்றவர்கள் வன்முறையை தூண்டியுள்ளனர். மக்களை திமுக திசை திருப்பியுள்ளது.
திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். திமுக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு யார் மேல் கோபம் என்பது தெரிய வருகிறது. கலவரத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் தூண்டுதலே காரணம். நான் விஷமிகள் என்று திமுகவைத்தான் குறிப்பிட்டேன்.
திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சில விஷமிகளும் சேர்ந்துவிட்டனர்.திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது. திமுக எப்போதும் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான கட்சிதான். கலவரத்தின் போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மக்கள் அச்சமின்றி இருக்க முடிந்தது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் பேசலாமா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை காட்டி முதல்வர் பேசினார்.ஆட்சியர் அலுவலகம், போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதல்வர் காட்டினார். புகைப்படங்களை காட்டி இவர்களைத்தான் மக்களா? என்று கேள்வி எழுப்பினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications