ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது அறிவிப்புக்கு வரவேற்பு... அவகாசமும் தந்திருக்க வேண்டும்: ஸ்டாலின்

ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை திமுக வரவேற்பதாகவும் ஆனால் பொதுமக்களுக்கு கால அவகாசம் தந்திருக்க வேண்டும் என்று அக்கட்சி பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் மத்திய அரசின் அவசரமான இந்த அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DMK welcomes Govt move to demonetise of Rs 1000, Rs 500.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் மக்களுக்கு சிரமமின்றி அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். மத்திய அரசு நேற்று ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும் என அறிவித்தது.

ஆனால் தற்போது ரூ500, ரூ1,000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்கள் வாங்குவதில்லை.

மேலும் தேர்தலின் போது கருப்பு பணத்தை ஒழித்து ரூ15 லட்சத்தை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வோம் என அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? என்பது குறித்தும் விளக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+