ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.. நிருபரிடம் சீறிய ஸ்டாலின்
ஆர்.கே.நகரில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தீர்மானிக்க முடியாது. திமுக தலைமை அதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார் ஸ்டாலின்.
சென்னை: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்தாரை தங்கச்சிமடம் சென்று, சந்திக்க செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் பேட்டியளித்தார்.
ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மீண்டும் சிம்மா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு தரப்படுமா என்ற நிருபரின் கேள்வியை தொடர்ந்து, ஸ்டாலின் கூறியதாவது: ஆர்.கே.நகரில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தீர்மானிக்க முடியாது. திமுக தலைமை அதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
மீனவர் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும். நாளை மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். இறந்த மீனவர் குடும்பத்திற்கு நேரடியாக நான் நேரடியாக ஆறுதல் சொல்ல உள்ளேன்.
தமிழக முழுக்க தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதுகுறித்தெல்லாம் பெங்களூர் சிறையிலுள்ள சசிகலா பினாமி ஆட்சி அதுகுறித்து கவலைப்படவில்லை.
செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் ஆந்திர போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.