அழகிரிதான் அட்ரஸ் இல்லாதவர்… திமுகவின் ஆர்.எஸ். பாரதி கமெண்ட்
சென்னை: அட்ரஸ் இல்லாத அழகிரி திமுகவிற்கு தேவையில்லை. திருந்த வேண்டியது அழகிரிதான் என்று திமுக குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த அழகிரி. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சையை கிளப்பினார். அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டனர்.

இதனால் மு.க. ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் தெரிவித்த கருத்துக்கள் திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து திமுகவிலிருந்து சில மாதங்களில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
புதுக்கட்சி துவங்குவார் என்று எதிர்பார்ப்பை கிளப்பிய அழகிரி கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு எதிராக செயல்பட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்துவந்த அழகிரி சில மாதங்களாக அமைதி காத்தார்.
இந்நிலையில் நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்த அழகிரியை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு குறித்து கேள்விகளை எழுப்பினர்.
"திமுகவில் மீண்டும் இணைவீர்களா? என்ற கேட்டதற்கு, தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர். எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றவர்
மேலும் அவர், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது" என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடிக்காட்டினார்.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அழகிரி, " ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது" என்றவர் அதைத்தொடர்ந்து "முகவரி இல்லாத ஆளைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள்" என கூறிவிட்டு சென்றார்.
அழகிரியின் இந்த கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பேசியுள்ளார். அழகிரியை சேர்த்துக்கொள்ளும் அளவு திமுக ஒன்றும் வலிமை குறைந்த கட்சியல்ல. அழகிரிதான் திமுகவை விமர்சித்து தனக்கு முகவரி தேடிக்கொள்கிறார் என்றார். மேலும் திருந்தவேண்டியது அழகிரிதானே தவிர திமுக அல்ல என்றும் கூறியுள்ளார் ஆர்.எஸ். பாரதி.
திமுகவின் புதிய அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, செய்த தவறுகளை உணர்ந்து இனி அவ்வாறு நடந்துகொள்ளமாட்டேன் என உறுதிமொழி கொடுத்தால் தலைவர், பேராசிரியர், ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications