பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும்.. இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு
பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மக்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''அரசு உடனடியாக இதில் செயலாற்ற வேண்டும். பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications