ஸ்ரீரங்கத்தில் அதிமுக தோல்வி அடையும் - கருத்துக்கணிப்பு
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக தோல்வி அடையும் நிலையில் உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால் தனது பதவியை இழந்தார். இதையடுத்து அங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் தி.மு.கவைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்தன. தற்போது அதிமுக சார்பில் இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ. வளர்மதி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியான நியூஸ் 7 தினமலர் கருத்துக் கணிப்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக தோல்வி அடையும் நிலை உள்ளதாக கூறுகின்றது.
இங்கு அதிமுகவுக்கு 39.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு 42.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிகவுக்கு 5.0 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications