இரவு 11 மணிக்கு உதயநிதி விடுவிப்பு... கலையாது நின்ற கூட்டம்... நள்ளிரவிலும் பிரச்சாரப் பயணம்..!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரவு 11 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டார்.
தாம் செல்லும் இடங்களிலெல்லாம் கட்டுங்கடங்காத கூட்டம் திரள்வதை பார்த்து அதிமுகவினருக்கு கண் உறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரச்சார பயணத்தை பொறுத்தவரை பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தொடர்ந்து தனது பயண நிகழ்ச்சிகள் தொடரும் எனவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

3-வது நாள்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அன்றிலிருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 தினங்களும் அவர் கைது செய்யப்பட்டார். முதல் நாள் திருக்குவளையில் கைது செய்த போலீஸ் அடுத்த நாள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உதயநிதியை கைது செய்தது. நேற்று மூன்றாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கைது செய்தது.

11 மணிக்கு விடுவிப்பு
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 11 மணி வரை விடுவிக்கப்படவில்லை. இதனால் குத்தாலத்தில் பதற்றம் அதிகரித்தது. உதயநிதி தங்கவைக்கப்பட்டிருந்த திருமண மண்டபம் முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் குவியத் தொடங்கினர். கோவையில் பாஜக வேல் யாத்திரையில் 6,000 பேருக்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி கோவைக்கு ஒரு நியாயம்? குத்தாலத்துக்கு ஒரு நியாமா? என முழக்கம் எழுப்பத் தொடங்கினர்.

உதயநிதி துணிச்சல்
இது குறித்த தகவல் நிமிடத்துக்கு நிமிடம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு சென்று கொண்டே இருந்தது. இதன் பிறகு இரவு 11 மணிக்கு மேல் உதயநிதியை விடுவித்தது போலீஸ். அப்போது உற்சாகம் பொங்க செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஒரு போதும் தனது பிரச்சார நிகழ்ச்சிகளை கைவிடமாட்டேன் என உறுதிபடக் கூறினார். மேலும், மணி இரவு 11 -ஐ கடந்துவிட்ட போதும் தமக்காக இன்னும் 4 இடங்களில் கட்சியினரும், மக்களும் காத்திருப்பதால் அவர்களை சந்தித்துவிட்டுத்தான் விடுதி அறைக்கு திரும்புவேன் எனத் தெரிவித்தார்.

கட்சி நிர்வாகிகள்
உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பிரச்சார பயணம் திமுகவினர் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக அவர் மீதான கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் கவனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
-
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications