சீனப் பட்டாசுகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது: வேல்முருகன்
சென்னை: இந்தியாவிற்குள் சீனப் பட்டாசுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் 1 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்திய அளவில் 90 விழுக்காடு வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் நடக்கிறது. கலால் மற்றும் விற்பனை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2,000 கோடி அளவுக்கு ஆர்டர்கள் குறைந்து போயுள்ளன. இதனால் அரசுக்கும் ரூ.530 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வாரத்துக்கு 3 நாட்கள்தான் வேலை என்பது நடைபெறுகிறது. இந்த மோசமான நிலைமைக்கு காரணமே சீனா பட்டாசுகளின் வரத்துதான்.
சீனா பட்டாசுகள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் வெவ்வேறு பெயர்களில் சீனாவில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்வதில் சமூகவிரோத கும்பல் மும்முரம் காட்டவே செய்யும்.
ஆகையால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் இந்த சீனா பட்டாசுகளை துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாக கொண்டுவரப்படுவதை மிகத் தீவிரமாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சீனா பட்டாசுகள் பதுக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அழித்து அவற்றை பதுக்கியோர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications