என்னையா கைது செய்றீங்க?.. நான் சொன்னால் அமைச்சர்கள் இங்கே வருவார்கள்.. சவுண்ட் விட்ட அஸ்வினி
செங்கல்பட்டு: என்னையா கைது செய்கிறீர்கள், நான் சொன்னால் போதும் அமைச்சர்கள் இங்கே வந்துவிடுவார்கள் என அஸ்வினி போலீஸாரையே மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அன்னதாம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு அன்னதானம் சாப்பிட பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

ஆனால் அவர்களை கோயில் நிர்வாகத்தினர் பந்தியில் அமர வைக்காமல் கீழே தனியே இலை போட்டு அதில் அமர சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் நடந்த பாகுபாட்டை விவரித்தார்.
இது சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கோயிலுக்கு சென்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அந்த பெண்ணையும் அவர் சமூகத்தினரையும் அழைத்து அன்னதானம் சாப்பிட்டார். முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் கவன ஈர்க்கப்பட்டது.
இந்த நிலையில் நரிக்குறவர்களுக்கு உதவ தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள வழங்கப்பட்டன.
இதையடுத்து நரிக்குறவர் இன பெண் அஸ்வினிக்கும் முதல்வர் கடனுதவி வழங்கினார். மேலும் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டார். அஸ்வினியின் குழந்தைகளை கொஞ்சினார்.
இதையடுத்து அஸ்வினியை நிறைய டிவி சேனல்கள் பேட்டி எடுக்கச் சென்றன. சமூகவலைதளங்களில் அஸ்வினி குறித்த பேச்சாகவே இருந்தது. இந்த நிலையில் இதை அஸ்வினி தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். வங்கிகளுக்கு சென்று கடன் கேட்டு மிரட்டியது, ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு காசு கொடுக்காமல் வருவது, கேட்டால் என் அரசியல் பேக்கிரவுண்ட் தெரியுமா என மிரட்டுவது, வியாபாரிகளிடம் காசு கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு அவர்களையும் மிரட்டுவது, கேக் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் கேக்கே நல்லா இல்லை, இதுல காசு வேறயா என கேட்டுவிட்டு போவது என அடுக்கடுக்காக புகார்கள் வந்தன.
இந்த நிலையில்தான் கடற்கரை கோயில் அருகே கடை வைக்கும் தகராறில் அஸ்வினிக்கும் நந்தினிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அஸ்வினி, நந்தினியின் கையில் பேனா கத்தியால் கீறியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அஸ்வினியை கைது செய்ய போலீஸார் சென்றனர்.
அப்போது அவர்களிடம் அஸ்வினி நான் யார் தெரியுமா, என் அரசியல் பேக்கிரவுண்ட் தெரியுமா. நான் சொன்னால் போதும் அமைச்சர்கள் எல்லாம் இந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள், அப்படிப்பட்ட என்னையே கைது செய்ய வந்துவிட்டீர்களா என அஸ்வினி கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து மேலிடத்திற்கு தகவல் பறந்த நிலையில் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் கைது செய்யுங்கள், நடவடிக்கை எடுங்கள் என உத்தரவு கிடைத்ததை அடுத்து அஸ்வினி கைது செய்யப்பட்டு திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அஸ்வினி அழுது கொண்டே வந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications