வாக்கு எண்ணிக்கை நாளில் ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
சென்னை: 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. நாடே முடிவுகளை எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்சி நிலைக்குமா போகுமா என்ற சஸ்பென்ஸ் நீடித்த நிலையில், போயஸ் கார்டனில் எந்த பதற்றமும் இல்லாமல் இருந்துள்ளார் ஜெயலலிதா.
கட்சி தொண்டர்களும், அரசியலை கவனிப்போரும்கூட காலை 6 மணிக்கு முன்பே எழுந்து மீடியாக்கள் மீது கவனம் வைத்திருநத் நிலையில், வழக்கத்தைவிட சற்று தாமதமாகவே விழித்தெழுந்தாராம் ஜெயலலிதா.
வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 7 மணிக்குதான் எழுந்தாராம் அவர்.
பூஜை
இதன்பிறகு வழக்கத்தைவிட அதிக நேரம் பூஜையறையில் செலவிட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம் அவர், பூஜையில் இருந்துள்ளார்.
ஆங்கில சேனல்கள்
வாக்கு எண்ண ஆரம்பித்ததும், ஆங்கில சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தாராம். திருப்பூர் அருகே பிடிபட்ட 3 கன்டெய்னர் பணம் விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்கவில்லை என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கமெண்ட் அடித்தாராம் ஜெயலலிதா.
எதிர்பார்த்தார்
இந்த வெற்றியை முன்கூட்டியே ஜெயலலிதா எதிர்பார்த்ததாக போயஸ்கார்டனில் உள்ள சிலர் நண்பர்களிடம் கூறி புழகாங்கிதம் அடைந்தார்களாம்.
அன்றே சிக்னல்
வாக்களிக்க வந்தபோது, யார் வெற்றி பெறுவார் என்று இன்னும் 2 நாளில் தெரியப்போகிறது என்று ஜெயலலிதா கூறியதும், தனக்கு கிடைத்த பாசிட்டிவ் தகவல்களை முன்வைத்துதான் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.
அதேநேரம், திமுக தலைவர் கருணாநிதியோ, அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு வாக்கு எண்ணிக்கையை பார்க்க ரெடியாக இருந்தாராம்.