நெஞ்சை நிமிர்த்தச் சொல்வதால் சகாயத்தை அதிமுகவுக்குப் பிடிக்கலை.. சீமான் பொளேர்!
நாமக்கல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பிடிக்காத காரணத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் நாமக்கல் மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
சகாயம் ஐஏஎஸ்ஸை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு ஏன் சுத்தமாக பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்பதால் திமுகவுக்கு பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்து என்பதால் அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.
அதிமுகவும், திமுகவும் ஊழல் கட்சிகள். கேங் ரூல், குண்டாஸ் ரூல் போன்று ஆகிவிட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணலை அள்ள தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளப்படுவதை எதிர்த்து போராடினால் சிறையில் அடைக்கிறார்கள்.
நம் மண்ணின் வளங்கள் கொள்ளை போகிறது. இது தான் தமிழகத்தின் நிலை என்றார்.












Click it and Unblock the Notifications