வலிப்பு.. வங்கதேச சிறுமியைக் காப்பாற்ற மூளையின் சிறுபகுதியை நீக்கிய சென்னை டாக்டர்கள்!

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் சமியா சுல்தானா என்ற எட்டு வயது சிறுமி. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை மற்ற சிறுமிகளைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த சுல்தானாவுக்கு திடீரென கீழ்வாத தசை வலிப்பு நோய் உண்டானது.
நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் நடமாட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார் சுல்தானா. பரிசோதனையில் அவளது இடது மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கட்டி புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கருதினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சவுமியா இங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் மாதத்தில் நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்ட அந்த சிறுமிக்கு வென்டிலேடர் மூலமாகவே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
ஆனபோதும், சுல்தானாவின் நிலைமை மேலும் மோசமடைந்தது. மருந்துகள் மூலம் அவளுக்கு குணமளிக்க முடியாத நிலை உண்டானது. சிக்கலான அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
ஆறு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட அவரது இடது மூளையின் ஒரு பகுதி மருத்துவர்களால் துண்டிக்கப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று வாரங்கள் வைக்கப்பட்டிருந்த சுல்தானா இப்போது உடல் குணமடைந்து நடக்கவும், உணவு உட்கொள்ளவும் முடிகின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகச் சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை சென்னை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications