ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் என்னா இருக்கு... ஐடி அலுவலகத்தில் ஆய்வு!
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடத்திய ஆய்வை தொடர்ந்து சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவில் 5 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு சசிகலா மற்றும் அதிமுக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் 2 பென்டிரைவ்கள், லேப்டாப் , ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடித பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதற்கான ஆவணங்களும் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பென்டிரைவ் மற்றும் கடிதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பென்டிரைவ் மற்றும் லேப்டாப்களை தேடியே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.