மானைத் துரத்திக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. !
கரூர்: நாமக்கல் அருகே சாலையில் குறுக்கிட்ட ஆண் மானை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறி விட்டன. இதில் மான் படுகாயமடைந்தது.
வலையபட்டியில் நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே இன்று காலை சுமார் எட்டு மணியளவில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்றை அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் துரத்தி கடித்துக்கொண்டு இருந்தன.
இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து நாய்களை துரத்திவிட்டு பார்த்தபோது அந்த மான் கால் உள்ளிட்ட பல இடங்களில் நாய்களால் கடிக்கப்பட்டு ஓடமுடியாமல் வழியால் துடித்தபடி இருந்தது.
இதுகுறித்து அருகில் உள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் நாமக்கல் வன சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வன சரக அலுவலர் பொதுமக்கள் உதவியுடன் வலையபட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் உடனடியாக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் தலைமையில் உள்ளிட்ட மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்தனர்.