எதையும் செய்யாதது தான் இந்த அம்மாவின் சாதனையே: மிஸஸ் கேப்டன்
திருச்சி: எந்த நலப் பணிகளையும் செய்யாதது தான் அதிமுக அரசின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் திருச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்தார்.
முத்துக்குமரன்
இந்தம்மா ஜெயலலிதா என்னத்த செஞ்சிட்டாங்க. இந்த தொகுதியில் போட்டியிட்டு நல்ல பெயர் எடுத்த கம்யூனிஸ்ட் தோழர் முத்துக்குமரன் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். அவருக்கு பதிலாக இந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை.
பேருந்து நிலையம்
கந்தர்வகோட்டையில் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை உயர்த்த அரசு கட்டும் பேருந்து நிலையத்தை சுடுகாட்டில் கட்டுவது சரியா?
சாதனை
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் என்ன நிலையில் இருக்கின்றது என்று மக்களே உங்களுக்கே நன்றாக தெரியும். எந்த நலப்பணிகளையும் செய்யாதது தான் அதிமுக அரசின் சாதனை என்றார் பிரேமலதா.
லேட்
பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று கூறிய நேரத்தில் பிரேமலதா வரவில்லை. அவர் வருவார் என்று எதிர்பார்த்து தேமுதிக தொண்டர்கள் சாலையோரம் உட்கார்ந்து காத்திருந்தார்கள்.
கலை நிகழ்ச்சி
பிரேமலதாவை எதிர்பார்த்து காத்து காத்து களைப்பாகி வந்தவர்கள் கிளம்பிவிடுவார்களோ என்று நினைத்து அவர்களை அங்கேயே இருக்க செய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இரவு
கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தப்பட்ட பிறகு பிரேமலதா சாவகாசமாக இரவு நேரம் பிரச்சாரத்திற்கு வந்தார்.