தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள்: வைரமுத்து 'நச்'
சென்னை: பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது பற்றியும் அவர் ட்வீட்டியுள்ளார்.
மை விவகாரம் குறித்து வைரமுத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கறுப்பை வெள்ளையாக்கக்
கவலைப்படும் தேசத்தில்
வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள்
தலையிலும்
விரலிலும்
கறுப்பை வெள்ளையாக்கக்
— வைரமுத்து (@vairamuthu) November 16, 2016
கவலைப்படும் தேசத்தில்
வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள்
தலையிலும்
விரலிலும்