நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது: தினகரன் பொளேர்
சென்னை: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது என்றும் அதிமுக தொண்டர்களை குழப்பி யாரும் ஏமாற்ற முடியாது, அப்படி செயல்பட்டால் தோல்வி அடைவார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
கட்சிக்கு துரோகம் செய்தால் அது யாராக இருந்தாலும் கட்சியைவிட்டு நீக்க பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. யாரையும் சேர்க்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
இந்த நிலையில் கட்சி இயங்கி வருகிறது. இதில் எடப்பாடி என்னை நீக்குவதாக அறிவித்துள்ளது செல்லாது. கட்சியின் பணிகளை நான் இல்லத்தில் இருந்தே தொடருகிறேன்.

எங்கள் ஆட்சி இது
நடப்பதே எங்கள் ஆட்சி. இதில் என்ன எனக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவது? நான் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளேன்.

பதவியை காப்பாற்ற
நான் கட்சியைப் பலப்படுத்த பாடுபடுகிறேன். இவர்கள், தங்களின் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள செயல்படுகிறார்கள். தொண்டர்களை குழப்ப பார்க்கிறார்கள். என்ன நீக்க சசிகலாவுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு.

பதவி வெறியர்கள்
இவர்கள் சில பேர் சொல்வதற்கெல்லாம் நான் செயல்பட முடியாது. பதவி வெறி பிடித்தவர்கள், சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது.

காளான்கள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திற்கு எதிராக எடப்பாடி அணியினர் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது, ஒன்றைரை கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்குதான் உண்டு, இவர்கள் தோல்வியடைவார்கள்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications