தூத்துக்குடி அருகே இரட்டைக் கொலை.. பதற்றம்.. போலிசார் குவிப்பு
தூத்துக்குடி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய 2 பேர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: புதூர் பாண்டியாபுரத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி மற்றும் அவரது நண்பர் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுார்பாண்டியாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஆவர். இவர் பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

முனியசாமி இன்று மாலை புதுார்பாண்டியாபுரத்தில் அவருடைய நண்பரான முத்துக்குமார் என்பவருடன் புதுார்பாண்டியாபுரம் ஊரணி அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் புதுார்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முனியசாமி மனைவி மஞ்சுளாவும் ராமச்சந்திரன் மனைவி பாக்கியலட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ராமச்சந்திரன் பதவியை தனது மனைவிக்கு விட்டுத்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முனியசாமி மறுக்கவே இருவருக்கும் முன் பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முனியசாமி அவரது நண்பருடன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்பகை காரணமாக இந்த இரட்டைக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications