5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்.. 2 நண்பர்கள் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டியில் 2 நண்பர்களை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு ஓடி விட்டது.

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது நண்பர் முருகன். பாலமுருகன் நகராட்சி ஊழியர் ஆவார். இருவரும் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது அவர்களை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

பின்னர் ஐவரும் சேர்ந்து முருகனையும், பாலமுருகனையும் சரமாரியாக கத்தி, அரிவாள் போன்றவற்றால் வெட்டியும், சரமாரியாக குத்தியும் தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.

இந்த இரட்டைக் கொலை குறித்தத் தகவல் கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணத்திற்காக இந்த இரட்டைக் கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+