எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி!
ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த போது உடன் இருந்த மருத்துவர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு 3வது முறையாக ஆஜராகியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா விசாரணைக் குழுவிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.
சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையம் கேட்டது. ஜெ. சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கினேன். ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications