எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி!
ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த போது உடன் இருந்த மருத்துவர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு 3வது முறையாக ஆஜராகியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா விசாரணைக் குழுவிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.
சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையம் கேட்டது. ஜெ. சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கினேன். ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications