எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி!
ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த போது உடன் இருந்த மருத்துவர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு 3வது முறையாக ஆஜராகியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா விசாரணைக் குழுவிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.
சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையம் கேட்டது. ஜெ. சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கினேன். ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications