பாஜகவில் சேர்ந்த கையோடு உறங்கிக் கிடந்த கவிதாயினியை வெளியே எடுத்து விட்ட ஜெமீலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவரான டாக்டர் ஜெமீலா தனது முதல் கவிதையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணியில் செயல்பட்டு வந்த ஜெமீலா மற்றும் பல முக்கியஸ்தர்கள் சமீபத்தில்தான் சரத்குமாரின் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

பன்முகம் கொண்டவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜெமீலா தனக்குள் இருக்கும் கவிதாயினியை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறி தனது முகநூலில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார். அது...

இதுவரை என் நெருங்கிய உறவுகள் மட்டுமே அறிந்த, எனக்குள் இருக்கும் கவிதாயினியை நான் முதன்முறையாக உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.

Dr Jemela's first poem

என்னுள் உறங்கிய பாரதியை
மெல்லென தட்டி எழுப்பிவிட்டேன்.
எழுந்தவன் எழுச்சியை எனக்களித்து
எழுதிடச் சொன்னான் கவிதனையே
என்னென்றெழுத.
நான் ஏதென்றெழுத.
திகைத்த என்னை முறைத்த அவனே
பெண்ணின் விடுதலை பாடச்சொன்னான்.
நாடே விடுதலையான பிறகு
பெண்ணுக்கொரு தனி
விடுதலை உண்டோ
என்றே கேட்டேன்.
வீறுகொண்டவன் கூறிய வரிகளில் கூர்மை இருந்ததை நானறிந்தேன்.

அழகிய பெண்ணுக்கு அழகே எதிரி.
அறிவில் சிறந்தால்
அறிவும் எதிரி
ஆளுமை கொண்டால்
அதுவும் எதிரி.
சிரித்தே பழக உறவும் எதிரி
எத்திசை நோக்கினும் எதிரியே உனக்கு
முழுதாய் சுதந்திரம்
கிடைத்ததா உனக்கு.
தீயெனும் கேள்வியில் அறிவினைச் சுட்டான்.
தீஞ்சுவை தமிழ்தனில்
மனதினை தொட்டான்.
உண்மைதானே
கூறடி பெண்ணே.
இந்நிலைக் காரணம் யாரடி பெண்ணே.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+