ஆர்.கே. நகரில் பணம் தரலைன்னா.. இ. நேத்ரா மூலம் வாங்கிக்கலாம்.. 'டர்'ரைக் கிளப்பும் டாக்டர் ராமதாஸ்!
சென்னை: எப்ப தருவீங்க?... எப்படி தருவீங்க? செக் தருவீங்களா? கேஸ் தருவீங்களா? என்று ஆளுங்கட்சியினரிடம் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள் கேட்பது போல கவுண்டமணி - செந்தில் படத்தைப் போட்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
தேர்தல் விதிமீறல்கள் பற்றி ஆறு வழிகளில் புகார் கூறலாம் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக இ-நேத்ரா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சந்தீப் சக்சேனா பெருமை பொங்க கூறி அறிவித்துள்ளார்.
|
பணம் தருவாங்களா பாஸ்
இ-நேத்ரா முறை பற்றி டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். பணம் வரவில்லை என்றும் புகார் தரலாமா என்றும் கேட்டுள்ளார்.
|
பணத்திற்கு ஓட்டு
அதிமுகவினர் இனி வாக்கை விலைக்கு வாங்கவே மாட்டார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் ராமதாஸ்
|
கவலைப்படாதீர்கள் முத்தரசன்
அதேபோல அதிமுகவினரின் அராஜகங்களை பட்டியலிட்டு புகார் கொடுத்துள்ள இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஆறுதல் தரும் விதமாகவும் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

எப்ப தருவீங்க?
அதெல்லாம் இருக்கட்டும் பணம் தருவாங்களா பாஸ்? எப்ப தருவாங்க? எப்படி தருவாங்க? ஒருவேளை கொடுத்துட்டாங்களோ?












Click it and Unblock the Notifications