பஞ்சு லாரி தீப்பிடித்ததாய் தவறாக நினைத்து கீழே குதித்த ஓட்டுநர் பரிதாப பலி!
சேலம்: சேலத்தில் பஞ்சு பாரம் ஏற்றிய லாரி மின்கம்பிகள் மீது உரசியதால் தீப்பிடித்ததாக தவறுதலாக எண்ணி கீழே குதித்த டிரைவர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகேயுள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரவி. இவர் ஆந்திர மாநிலம், குண்டூரிலிருந்து கோவை பல்லடத்தில் இயங்கிவரும் ஒரு நூற்பாலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு அரூர் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
இவர் ஓட்டிவந்த லாரி, அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் செல்லம்பட்டி புதூர் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது அந்த வழியில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது லாரியிலிருந்த பஞ்சு மூட்டைகள் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த மின் கம்பம் மீது மோதியது.
மின் கம்பியில் மோதியதால் லாரி தீ பிடித்திருக்கும் என்ற அச்சத்தில் ஓட்டுநர் ரவி லாரியை விட்டு இறங்கி சாலையில் ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications