டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கு: கூடுதலாக 4 மாத அவகாசம் கேட்டு சி.பி.ஐ மனு தாக்கல்
டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டு சி.பி.ஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னை : டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 4 மாதங்கள் அவகாசம் கேட்டு சி.பி.ஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி யாக பணிபுரிந்தவர் விஷ்ணுப்பிரியா. இவர் கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி விஷ்ணுப்பிரியா உடல் தூக்கில் தொங்கிநிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனைத்தொடர்ந்து தன் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்றி , 3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் தான் சி.பி.சி.ஐ.டி வழங்கியதாகவும். விசாரணை சுமூகமாக நடப்பதாகவும் கூறி இந்த விசாரணைக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 4 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications