வட கிழக்கு பருவமழை தீவிரம்.. குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.காலைமுதலே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து அருவிக்கரை களைக் கட்டி வருகிறது.
தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துவருகிறது.
நெல்லைமாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி,செங்கோட்டை ,கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக தென்காசியில் 46.30மில்லி மீட்டர் மழையும்,செங்கோட்டையில் 29மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கன மழையின் காரணமாக தென்காசி வட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, குற்றாலம்,இலஞ்சி,தென்காசி,புளியரை,உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.காலைமுதலே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து அருவிக்கரை களைக் கட்டி வருகிறது. அருவியில் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளதால் ஐயப்ப சீசனுக்கு கடை ஏலம் எடுத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications