திமுக- மதிமுக இணைப்பா? மூத்த நிர்வாகி துரைசாமி மீது நடவடிக்கை இல்லை.. துரை வைகோ பதில்
சென்னை: மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், அவருடைய கடிதத்தை புறந்தள்ளுங்கள் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுகவை தொடங்கிய போது தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது.

இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என வைகோவை கடுமையா சாடி கடிதம் எழுதியுள்ளார் துரைசாமி.
வைகோவிற்கு ஏற்கெனவே 4 முறை கடிதம் எழுதியும் ஏன் பதில் தரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, கட்சியில் நான் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். கட்சியில் நானா பிளவை ஏற்படுத்துகிறேன் என துரைசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
மதிமுக தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமனத்தை எதிர்த்து திருப்பூர் துரைசாமி எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். டிவி சேனல் ஒன்றுக்கு துரை வைகோ அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை. தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மதிமுகவில் பெரியவர்களுக்கு மரியாதை தருகிறோம். எனவே அவருடைய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ளுங்கள் என துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications