Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக- மதிமுக இணைப்பா? மூத்த நிர்வாகி துரைசாமி மீது நடவடிக்கை இல்லை.. துரை வைகோ பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், அவருடைய கடிதத்தை புறந்தள்ளுங்கள் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுகவை தொடங்கிய போது தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.

ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது.

Durai Vaiko gives reply to Thiruppur Duraisamys letter

இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என வைகோவை கடுமையா சாடி கடிதம் எழுதியுள்ளார் துரைசாமி.

வைகோவிற்கு ஏற்கெனவே 4 முறை கடிதம் எழுதியும் ஏன் பதில் தரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, கட்சியில் நான் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். கட்சியில் நானா பிளவை ஏற்படுத்துகிறேன் என துரைசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

மதிமுக தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமனத்தை எதிர்த்து திருப்பூர் துரைசாமி எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். டிவி சேனல் ஒன்றுக்கு துரை வைகோ அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை. தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மதிமுகவில் பெரியவர்களுக்கு மரியாதை தருகிறோம். எனவே அவருடைய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ளுங்கள் என துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+