எமர்ஜென்சி காலத்தில் கூட இதுபோன்ற சர்வாதிகார போக்கு நடைபெறவில்லை.. ரெய்டு குறித்து துரைமுருகன்!
நடிகர் விஷால அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு சர்வாதிகார போக்கு என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு சர்வாதிகார போக்கு என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷால். மேலும் இணையதளத்தில் படம் பார்த்ததாக கூறிய எச்.ராஜாவையும் வெட்கமே இல்லையா என வெளுத்துவாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால்.

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் உள்நோக்கம் உள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் எமர்ஜென்சி காலகட்டத்தில் கூட இது போன்ற சர்வாதிகார போக்கு நடைபெறவில்லை என்றும் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications