ஆவின் பால் விலை உயர்வு: டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் இரு அமைப்பினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு முழக்கமிட்ட அவர்கள் அரசுக்கு எதிராகவும், விலை உயர்வை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications