திருவண்ணாமலையில் நில அதிர்வு: பீதியில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட லேசான நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை நகரப்பகுதி மற்றும் அதையொட்டிய வேங்கிக்கால், தென்றல்நகர், அடிஅண்ணாமலை, நல்லவன்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 8.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

Earthquake of ‘slight intensity' in Tiruvannamalai

இதனால் பல வீடுகளில் இருந்த மேஜை, நாற்காலிகள் லேசாக ஆடின. இந்த நடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து குழந்தைகளை தூக்கி கொண்டு அலறி அடித்தபடி சாலைக்கு வந்தனர்.

இந்த நில அதிர்வு காலை வேளையில் ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்ல தயாரான குழந்தைகளை , பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நில அதிர்வு மீண்டும் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் திருவண்ணாமலை மக்கள் சாலையில் கும்பல் கும்பலாக தாங்கள் உணர்ந்த நில அதிர்வை பற்றி பேசியபடி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+