ஏற்காடு இடைத்தேர்தல்: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசாரம் செய்யதடை

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் காலை 10 மணிமுதல் 6 மணிவரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சேலம் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மகரபூஷணம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள்:

ஏற்காடு (எஸ்.டி) சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உரிய அலுவலரின் அனுமதி இன்றி காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தல் அல்லது ஒலி பெருக்கியை ஒரே இடத்தில் கட்டுதல் கூடாது.

சைக்கிள் ரிக்ஷா ஒரு வாகனமாகும். அதனை பயன்படுத்தினாலும் வேட்பாளர் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

வாகனத்தில் இதர பொருட்கள் ஒலி பெருக்கி ஆகியவற்றினை மோட்டார் வாகன சட்டத்திற்குட்பட்டு உள்ளூர் சட்ட திட்டங்களுக்குட்பட்டும் வைக்க அனுமதி உண்டு.

அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், வேட்பாளர்கள், அவரது முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன தணிக்கையின் போது தொகை ரூ.50,000மும் அதற்கு மேலும் எடுத்துச் சென்றால் அது வாக்காளரை முறையற்ற விதத்தில் தூண்டும் நோக்கில் எடுத்து செல்வதாக கருதப்படும்.

எனவே, எடுத்துச் செல்லும் பணத்திற்கு தக்க ஆவண, ஆதாரங்கள், தணிக்கை அலுவலர்கள் சோதனையின் போது காண்பித்து தேவையான ஒத்துழைப்பு அளிக்குறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்திற்கு தகுந்த முகாந்திரம் இல்லையெனில், அவை தணிக்கைக் குழுவால் கைப்பற்றப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+