எந்த நேரத்திலும் இரட்டை இலை சின்னத்தின் தேர்தல் ஆணைய தீர்ப்பு வெளியாகலாம்? அதிமுகவில் ‘பரபர’
இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பை தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் தீர்ப்பளிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் முதலில் கலகக் குரல் எழுப்பி இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதன் பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிட்டனர்.

தினகரன் ஷாக் வாதம்
அதேநேரத்தில் தினகரன் தரப்போ, தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் சின்னத்தையே முடக்கி வைக்க வேண்டும் என தடாலடி வாதத்தை முன்வைத்தது.

நிதிஷ்குமாருக்கு சாதகமான தீர்ப்பு
இவ்விருவாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படமால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஐக்கிய ஜனதா தள் கட்சியும் அதன் சின்னமுமாம அம்புவும் நிதிஷ்குமாருக்குதான் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இரட்டை இலை யாருக்கு?
இதேபோல் இரட்டை இலை சின்னம் வழக்கிலும் தேர்தல் ஆணையம் நேற்றே தீர்ப்பை அறிவிக்கும் என சில தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சூடாகும் அரசியல் களம்
இதனால் எந்த நிமிடத்திலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இத்தீர்பு வெளியான பின்னர் தமிழக அரசியல் களம் மேலும் பரபரக்கும்.












Click it and Unblock the Notifications