மீனவர்கள் மூலம் "வாக்கு வலை" வீசும் தேர்தல் ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது. பல விதங்களில் அதன் பிரசாரம் நடந்து வரும் நிலையில் தற்போது மீனவர்கள் மூலமும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மே 16ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகள் மூலமும், கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மூலமும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

EC ropes Fishermen for Election awareness campaign

தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடலுக்குள் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகளில் மே 16ம் தேதி் 100 சதவீத வாக்களிக்க தயாராகுங்கள் என்ற பாதகையை மீனவர்கள் ஏந்தி நின்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் கோபால் சுந்தர்ராஜ் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சப் கலெக்டர் கோபால் சுந்தர்ராஜன் விளக்கமளித்தார். தேர்தல் பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இது போல் பலவேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதிரடியாக தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+