தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதிகள் அடுத்தவாரம் அறிவிப்பு!
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேர்தி அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதனால் அங்கு தேர்தல் நடத்துவதை நிறுத்த இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. பின்னர் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலே ரத்தும் செய்யப்பட்டன.
அப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பதவி ஏற்கும்முன்னரே காலமானார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications