கடும் குடிநீர் பஞ்சம்… சமாளிக்க முடியாத வறட்சி.. அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி குறித்து அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: வடகிழக்கு பருவ மழை பொய்த்து இந்த ஆண்டு கடுமையான குடிநீர் பஞ்சத்தை தமிழகம் எதிர்க்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது.
சென்னைக்கு குடிநீர் அளித்து வரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன. தற்போது மோட்டார் இயந்திரங்களை வைத்து நீர் ஏற்றி சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும், பொதுமக்கள் நீரின்றி குடத்தோடு சாலைகளில் அலைந்து வருகின்றனர்.

இதுதவிர, தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு நீரில்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சிக்கு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணம் அடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த குடிநீர் பிரச்சனையை எப்படி இந்த கோடை காலத்தில் கையாள்வது என்பது குறித்தும், விவசாயத்திற்கு தேவையான நீரை அண்டை மாநிலங்களில் இருந்து பெறுவதும் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications