ரஜினி கட்சி ஆரம்பித்தால் ஒரே "ஜம்ப்".. 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் ரெடி.. "ஷாக்"கில் எடப்பாடி!
சென்னை: தனி கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ள நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடி கோஷ்டியில் உள்ள 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவம் கிடந்து வருகின்றனராம்.
காலா படத்துக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரை வளைத்துப் போட பாரதிய ஜனதா கட்சி இன்னமும் தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறது.

ரஜினி கட்சி
ஆனால் பாஜகவின் நெருக்கடிக்கு பணியாமல் ரஜினி தனிக்கட்சிதான் என்பதில் உறுதியாக உள்ளாராம். அப்படி ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கட்சி தாவவும் முடிவு செய்துள்ளனர்.

அதிமுகவினர் தூது
இப்போது அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களும் ரஜினிகாந்துக்கு தூதுவிட்டு வருகின்றனராம். குறிப்பாக தனி ஆவர்த்தணம் வாசிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் 5 பேர் ரஜினிகாந்த் வீட்டு கதவை தினமும் தட்டியபடிதான் உள்ளனராம்.

ஆலோசனை
ஆனால் மும்பையில் படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் இப்போதைக்கு எந்த சிக்னலும் தர வேண்டாம் என கூறியுள்ளார். அத்துடன் தமது 'ஆலோசகர்களை' அழைத்து இந்த அதிமுக எம்.எல்.ஏக்களை எப்படி கையாள்வது எனவும் கேட்டிருக்கிறார்.

போயஸ் பங்களா
அன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் தேவுடு காத்திருந்தனர் இந்த எம்.எல்.ஏக்கள். இன்று அதேபோயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பங்களாவின் கதவு திறப்புக்காக இலவு காத்து கிடக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications