எடப்பாடி அரசின் "மெஜாரிட்டி" விவகாரத்தில் தலையிட முடியாது.. கைவிரித்தார் ஆளுநர்!
எடப்பபாடி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னை: முதல்வர் எடப்பாடி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை விடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் அதிமுகவின் உள்கட்சி பூசல் நிலவி வருவதால் இதில் சட்டபடி தலையிட முடியாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டார். முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சில எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு மாறவும் வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

ஆளுநரிடம் கடிதம்
சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடியார் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று எதிர்க்கட்சிகளான திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்து பேசினர்.

பெரும்பான்மையை நிரூபிக்க கோரி
அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.

பாஜக பஞ்சாயத்தே காரணம்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்கு பாஜகவின் பஞ்சாயத்தே காரணம். ஆளுநர் தாமதிக்காமல் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆளுநர் கைவிட்டு விட்டார்
அப்போது பேசிய திருமாவளவன், ஒரே கட்சியில் இருகுழுக்களாக பிரிந்ததால் இந்த சூழலில் சட்டப்படி தலையிட முடியாது என்றும், அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபித்து விட்டது என்று எங்களால் முடிவெடுக்க முடியவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications