Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டி... முக்கிய துறைகளை வாரி வழங்கும் எடப்பாடி!

ஜெ. ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியிடம் இருந்து அப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி அவருக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியிடம் இருந்து அப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு ரூ.89 கோடி ரொக்கமும், ஆவணங்களு்ம கைப்பற்றப்பட்டன.

வருமான வரித்துறை பிடியில்...

வருமான வரித்துறை பிடியில்...

இந்நிலையில் ரெய்டு, விசாரணை என்று வருமான வரித்துறையின் பிடியில் விஜயபாஸ்கர் இருந்தார். அவரது மனைவி ரம்யாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு எடப்பாடி அரசை நிர்பந்தித்தது.

எடப்பாடிக்கு மிரட்டல்

எடப்பாடிக்கு மிரட்டல்

ஆனால் என்னைபதவியில் இருந்து நீக்கினால் உங்கள் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன் என்று விஜயபாஸ்கர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்ததால் அவர் மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் தவித்து வந்தார். இதனிடையே சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அதிகாரிகளின் பெயர்கள் உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் பட்டியலை அளித்தது.

நடவடிக்கை எடுக்க ஆயத்தம்

நடவடிக்கை எடுக்க ஆயத்தம்

இதையடுத்து கிரிஜா வைத்தியநாதனும் அந்த பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமான நிலையில் தற்போது அவர் வசம் இருந்த லஞ்ச ஒழிப்பு ஆணையர் பதவி பறிக்கப்பட்டு உள்துறைச் செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான கோப்புகள் வெள்ளிக்கிழமை தயார் செய்யப்பட்டு விட்டதும் தெரியவந்துள்ளது.

யார் இந்த நிரஞ்சன் மார்டி?

யார் இந்த நிரஞ்சன் மார்டி?

கடந்த 2013-ஆம் ஆண்டு உள்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் மார்டி, ஜெயலலிதாவிடம் அதிருப்தியை சம்பாதித்தார். இதனால் அவர் அப்பொறுப்பிலிருந்து இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அப்பதவிக்கு அபூர்வ வர்மாவை ஜெயலலிதா நியமித்தார்.

குட் வில் புக்

குட் வில் புக்

நான்கு ஆண்டுகளுக்கு மேல் அப்பதவியில் இருந்த அபூர்வ வர்மா, ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் ஆளுங்கட்சியினரின் பேச்சைக்கூட சில நேரங்களில் கேட்காமல் இருந்தார். தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்தபோதிலும் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்திருந்த அவரை அமைச்சர்களால்கூட எதுவும் செய்யமுடியவில்லை.

எடப்பாடி பரிந்துரை

எடப்பாடி பரிந்துரை

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டிக்கு பல்வேறு முக்கிய துறைகளை வழங்கினார். தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்றதும் முதல் வேலையாக அபூர்வ வர்மாவிடம் இருந்த உள்துறை செயலாளர் பதவியை பறித்து நிரஞ்சனிடம் வழங்கினார் எடப்பாடி. தற்போது லஞ்ச ஒழிப்பு துறை ஆணையர் பதவியும் நிரஞ்சன் மார்டிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+